Sunday, August 16, 2015

kaavati sinthu

காவடிச் சிந்து!

 ஓம்சக்தி ஓமெனும் ஓங்காரத் துள்ளொளிர்     தாயே! - துணை 
                                                                                       நீயே! - அருள் 
                                                                                      வாயே! -  வையம்
 ஓங்குபு கழ்மரு வூரின்கண் தோன்றிய             மாயே! -என்றும் 
 உனையேதொழ    துணையேஅடி  இணையேஎன  வினையேஅற
 ஓடியே வந்தெமைக் காப்பாய்! - நலம் 
 நாடியே இன்னருள் சேர்ப்பாய்!  

 ஆம்சக்தி நீயென்றே ஆன்மிக அன்பர்கள்   தேட - உள்ளம் 
                                                                                நாடத்  - தொண்டில் 
                                                                                கூட - மறை 
ஆன்றபொ ருள்கண்ட அன்னையுன் மந்திரம் பாடத்  - தமிழ் 
அன்பின்உயர்  பெண்ணின்புகழ் விண்ணின்நிகர்  என்னும்படி 
மன்றங்கள் தந்தஎம் குருவே! - அங்கு 
 நின்றெம்மைக் காத்திடும் திருவே!
                                                    -கவிஞர் சரோசா தேவராசு 

மும்மண்டில வெண்பா 

1)  மின்னிடும்  கன்னமோ! மென்மலர்  அன்னமோ! 
     புன்னகை  தண்முகம் பொன்எழில்  சின்னமோ!  
     கண்கயல் வண்ணமோ! கண்டதும் என்மனம் 
     இன்பமே உன்னுதே இன்று 

2) கன்னமோ! மென்மலர் அன்னமோ! புன்னகை 
    தண்முகம் பொன்னெழில் சின்னமோ! கண்கயல் 
    வண்ணமோ! கண்டதும் என்மனம் இன்பமே    
    உன்னுதே இன்றுமின்னி டும்  

    
3) மென்மலர் அன்னமோ! புன்னகை தண்முகம் 
    பொன்னெழில் சின்னமோ! கண்கயல் வண்ணமோ! 
    கண்டதும் என்மனம் இன்பமே உன்னுதே   
    இன்றுமின் னிடும்கன்ன மோ!

0 comments: